- நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..)
- ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( ...நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.)
- தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.
- இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.
- மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.
- குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம் (அதான் எங்களுக்கு தெரியுமே ....புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? )
- அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும். (...யாருக்கு தெரியும் ! கனவு காண்பவர்களைத் தான் கேக்கோணும்...)
- மூன்றுவார கருவிலிருந்தே இதயம் இயங்க ஆரம்பித்து விடும். உங்களது இதயம் ஒரு ஆண்டில் 30 மில்லியன் தடவைகள் துடிக்கிறது.
- புருவமுடி 10 வாரங்களில் விழுந்து விடுகிறது. உங்கள் தலையில் உள்ள ஒரு முடி ஐந்து ஆண்டுகள் விழாமல் இருக்கும் ( ஆண்களில் சிலர் தலையை தடவி ...கதை உடாதபா !!)
- உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.
- மனிதன் ஏதும் சாப்பிடாமல் ஒருமாதம் வாழலாம் ஆனால் ஒரு வாரம் மட்டுமே தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியும். ( ...உண்ணாவிரதம் இருப்பவர்கள் கவனிக்க..!)
- மக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.
- அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.
Sep 28, 2013
நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!
Subscribe to:
Posts (Atom)