Sep 28, 2013

நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!



  1. நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..)
  2. ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( ...நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.)
  3. தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது. 
  4. இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.
  5. மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.
  6. குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம்   (அதான் எங்களுக்கு தெரியுமே ....புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? )
  7. அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும். (...யாருக்கு தெரியும் ! கனவு காண்பவர்களைத் தான் கேக்கோணும்...)
  8. மூன்றுவார கருவிலிருந்தே இதயம் இயங்க ஆரம்பித்து விடும். உங்களது இதயம் ஒரு ஆண்டில் 30 மில்லியன் தடவைகள் துடிக்கிறது. 
  9. புருவமுடி 10 வாரங்களில் விழுந்து விடுகிறது. உங்கள் தலையில் உள்ள ஒரு முடி ஐந்து ஆண்டுகள் விழாமல் இருக்கும் ( ஆண்களில் சிலர் தலையை தடவி ...கதை உடாதபா !!)
  10. உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.
  11. மனிதன் ஏதும் சாப்பிடாமல் ஒருமாதம் வாழலாம் ஆனால் ஒரு வாரம் மட்டுமே தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியும். ( ...உண்ணாவிரதம் இருப்பவர்கள் கவனிக்க..!)
  12. மக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.
  13. அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.

Dec 21, 2011

விண்டோஸ் பழுதுபார்ப்பு!


விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் உபயோகிப்பவர்கள் அவ்வப்போது, தங்களது கணினி பூட் ஆகும் பொழுது, விண்டோஸ் லோடு ஆகும் திரை வந்த பிறகு, உடனடியாக ரீஸ்டார்ட்  ஆகும் பிரச்சனையை சந்தித்து இருக்கலாம். 


இப்படி முதல் முறை ரீஸ்டார்ட்  ஆகி மறுபடி பூட் ஆகும் பொழுது Safe mode ஆப்ஷனோடு திரை வந்திருக்கும். 
இதில் Safe mode இல் சென்றாலும், Last known Good Configuration -இல் சென்றாலும், இதே போன்று தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கும், உள்ளே இருக்கும் உங்களது முக்கியமான டேட்டாக்கள் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை. 

சரி, விண்டோஸ் சீடியை வைத்து பூட் செய்து இந்த இயங்குதளத்தின் மேலேயே over write செய்து விடலாம் என்று முயலும் போது, அங்கேயும் ஆப்பு காத்திருக்கும்.  விண்டோஸ் சீடியில் பூட் செய்து முதலாவது Repair ஆப்ஷனை தவிர்த்து  Agreement பக்கத்திற்கு அடுத்து வரும் திரையில் கீழே உள்ளது போல உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷன் காண்பிக்கப்பட்டால் 'R' கீயை அழுத்தி ரிப்பேர் செய்து கொள்ளலாம். 


 ஆனால், விண்டோஸ் ரிப்பேர் வசதியில் செல்லும் போது உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனை Unknown partition என்றோ அல்லது விண்டோஸ் ஏற்கனவே நிறுவப்படாத மற்ற பார்ட்டிஷன்களை போலவே உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனும் பட்டியலிடப்பட்டிருக்கும். இது போன்ற நிலை வரும்பொழுது சற்று சிக்கல்தான். 

முதலாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இந்த நிலைக்கு முந்தைய வரலாறு (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!..) அதாவது இந்த ரீஸ்டார்ட் பிரச்சனை வருவதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது? முழுவதுமாக ஷட் டவுன் ஆவதற்கு முன்பாக பவரை அனைத்து விட்டீர்களா? அல்லது கரண்டு போய்விட்டதா? யாராவது Reset பட்டனை அழுத்திவிட்டு போய் விட்டார்களா? அல்லது இதில் ஏதுமில்லையா? 

இந்த கேள்வியெல்லாம் எதற்கு? என்றால், இது போன்ற ரீ ஸ்டார்ட் பிரச்சனை பெரும்பாலும் பூட் பார்ட்டிஷனில் கோப்புகள் கிராஸ் லிங்க் ஆகிவிடவதால் ஏற்படுபவை, அல்லது (மிக அரிதாக) உங்கள் வன்தட்டிற்கு வயதாகி கொண்டிருக்கிறது அல்லது (மிகமிக அரிதாக) பிராசசர் ஃபேனில் தூசி அதிகம் படிந்து, ஃ பேனின் வேகம் குறைந்தது  என்றும் கொள்ளலாம். கிராஸ் லிங்க் ஆவதற்கு முக்கிய காரணம் முறையாக ஷட் டவுன் செய்யாமலிருப்பது.

இந்த பிரச்சனை வரும் பொழுது எடுத்தவுடனே விண்டோஸ் Over write செய்து விடலாம் அல்லது புதிதாக வேறு ட்ரைவில் நிறுவிவிடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு முன்பாக, விண்டோசின் தாத்தா DOS கருவியான Chkdsk ஐ பயன்படுத்தி இந்த பிரச்னைக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம். 

விண்டோஸ் பூட் சீடியை வைத்து உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். பிறகு முதலாவதாக வரும் Repair திரையில் 'R' கீயை அழுத்தி Recovery Console திரைக்கு வந்து விடுங்கள். 

     
இந்த பிரச்சனை உள்ள கணினிகளில், விண்டோஸ் பார்ட்டிஷன் உள்ள ட்ரைவை குறிப்பிடும்படி கேட்காது. தேர்வு செய்ய சொல்லி வந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, C:\> ப்ரோம்ப்டில் CHKDSK /R கட்டளை கொடுக்கலாம். ஒரு சில சமயங்களில் இந்த கட்டளை இயங்காமல் போனால், CD/DVD   ட்ரைவிற்கு   சென்று (உதாரணமாக g:) அங்கு CD\i386 கட்டளை கொடுத்து அந்த டைரக்டரிக்கு சென்று அங்கு CHKDSK கட்டளையை கொடுங்கள். 


இது முடிந்த உடன் Exit கொடுத்து கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது. கிராஸ் லிங்க ஆன சிஸ்டம் கோப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, கணினி முன்பு போல இயங்கும்.  பெரும்பாலான கணினிகளில் இந்த வழியை பயன்படுத்தி விண்டோஸ் எக்ஸ்பி ரீ ஸ்டார்ட் பிரச்சனையை சரி செய்யப் பட்டுள்ளது.

நன்றி:சூர்யா கண்ணன்

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு


பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு
பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான்


பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்



ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம்

முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்திஅந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டனபிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்


டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்


.

Sep 14, 2011

அரக்கோணம் அருகே ரயில்கள் மோதல்

சென்னை: அரக்கோணம் அருகே, சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த ரயில் மீது, மற்றொரு ரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், பலர் பலியானதாக அஞ்சப்படுகிறது;200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அரக்கோணத்திலிருந்து, நேற்று இரவு, வேலூர் கன்ட்டோன்மென்டிற்கு சென்ற பயணிகள் ரயில், சித்தேரி அருகே, சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது, சென்னை, பீச்சிலிருந்து, வேலூர் சென்ற மற்றொரு ரயில், நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில், பயணிகளில் 15 க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்திற்கு, சென்னையிலிருந்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ரயில் விபத்தால், சென்னை சென்ட்ரலிலிருந்து காட்பாடி வழியாக, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை மற்றும் பெங்களூர் செல்லும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி:  தினமலர்

Sep 2, 2011

சூரிய கறைகள்

தலைப்பைப் பார்த்து தமிழ்நாட்டு அரசியல் சார்ந்த பரபரப்பிலக்கிய கட்டுரையோ என்று எதிர்பார்க்காதீர்கள். அவ்விஷயங்களில் அறிவார்த்தமான கருத்துகள் என்னிடம் இல்லை. நாளை மற்றொரு நாளே; இதுவும் மற்றொரு அறிவியல் கட்டுரையே.
ஸன் ஸ்பாட் என்பதை சூரிய கறை என்கிறேன். சூரிய புள்ளி, சூரிய பொட்டு என்றெல்லாம் தமிழாக்குவதற்கும் சார்ந்த கலைச்சொல்லாராய்ச்சி விவாதங்களில் நடுநிலை வகிப்பதற்கும் தற்போது ஒழியவில்லை. தொடருவோம்.
சூரிய கறைகளுக்கு அல்பாயுசு. சுமார் இருபது அல்லது முப்பது நிமிடங்களில் உருமாறிவிடும். தோன்றிய வேகத்தில் அழிந்தும் விடலாம்.  தோன்றி உருமாறி மறைகையிலேயே அவற்றை சுடச்சுட நேரிடையாக படம்பிடித்து சென்ற வாரம் (ஏப்ரல் 2011) நாஸா வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். முதலில் அதை பார்த்துக்கொள்ளுங்கள்.


வீடியோ சுட்டி. http://youtu.be/U0Lt3SgiEQ8
வீடியோவில் சூரியனின் மேற்பரப்பு அக்னிக்குழம்பாக. ஊடே கருப்பாக சிறு சுழல்கள் போல் தெரிவது சூரியனின் பரப்பில் தோன்றி இடம்மாறும் சூரிய கறைகள். பிரத்யேகமாக சூரியனை ஆராய்வதற்கான  நாஸாவின் ஸோலார் டைனமிக் அப்ஸர்வேட்டரி எனும் வின்கலத்திலிருக்கும் ஹெலியோஸீஸ்மிக் அண்ட் மேக்னெட்டிக் இமேஜர் எனப்படும் டெலஸ்கோப் காமிரா இரண்டு வாரம் தொடர்ந்து அவுட்டோர் ஷூட்டிங்காய் புவியொருமித்தசுழற்சிப்பாதையில் (ஜியொஸிங்க்ரொனஸ்), சூரியனுடன் சுற்றிப் படம்பிடித்து அனுப்பியது.

படத்திலிருப்பதுதான் நாஸாவின் எஸ்.டி.ஓ. HMI என்று குறிப்பிட்டிருப்பது ஹெலியோஸீஸ்மிக் அன்ட் மேக்னெட்டிக் இமேஜர் எனப்படும் டெலஸ்கோப் காமிரா. மேலும் தகவல்கள் நாஸாவின் http://sdo.gsfc.nasa.gov/ வலைதளத்தில்.
சூரிய கறைகள் ஏன் ஏற்படுகிறது என்பது இன்னமும் முழுவதுமாக நமக்கு புரியவில்லை. அணுமானிப்புகளை ஒட்டிய வானியளாலர்களின் கூற்றுபடி சூரியக்கறை என்பது சூரியனில் ஏற்படும் வெப்ப சலனங்களும் காந்தப் புயல்களும் கலந்து செய்த கலவை. ஆயிரம் மைல் சைஸில், சுமார் 4000 முதல் 5000 கெல்வின் வரை வெப்பநிலையிலிருக்கும், பிளாஸ்மா நிலையிலுள்ள மேட்டர் சுழன்றடிக்கும் ராட்சஸ மின்காந்த சூறாவளி.
சூரிய கறைகளுக்கு முன் சூரியனின் வெப்ப சலனம் பற்றி.
வெப்ப சலனம், கன்வெக்‌ஷன் என்பதின் தமிழ். உடனடியான உதாரணம் சூடான காற்று, புகை, புவியீர்ப்பு விசையை எதிர்த்து தன்னிச்சையாக மேலெழும்புவது வெப்ப சலனம். அடுப்படிவரை சென்றிருந்தால், பாத்திரத்தினுள் தேமேனென்றிருக்கும் நீரை அடுப்பில் மிதமாக சூடுபடுத்துகையில்  தன்னிச்சையாக அது பாத்திரத்தில் கீழிருந்து மேலாக சுழலுவதை கவனித்திருப்போம். இதுவும் புவியீர்ப்பு திசையை எதிர்த்து மேலெழும்பும் வெப்ப சலனம்தான். அறிவியல் பரிபாஷையில் வெப்பத்தினால் உந்தப்பட்ட தன்னிச்சையான திரவ ஓட்டத்தை நேச்சுரல் அல்லது ப்ரீ கன்வெக்ஷன் (natural or free convection) என்பர்.
காற்று, தண்ணீர் மற்றுமின்றி அநேக திரவங்களுக்கு வெப்பமூட்டுகையில் புவியீர்ப்பு திசையை எதிர்த்து மேலெழும்பும் இத்தன்மை இருக்கிறது. சூடான திரவத்தின் அடர்த்தி அதனை சுற்றியுள்ள மற்ற பகுதிகளின் அடர்த்தியிலிருந்து குறைகிறது. இதனால் மற்ற பகுதிகளை காட்டிலும் அடர்த்தி குறைந்த திரவத்தின்மேல் புவியீர்ப்பு விசையின் ஆதிக்கம் கம்மியாகி, அதனை அடர்த்தி அதிகமுள்ள திரவபகுதிகளினூடே மேலெழும்பச்செய்கிறது. இதனை மிதவு விசை (buoyancy force) என்பர். மேலே சென்ற வாயு விட்டுச்சென்ற வெற்றிடத்தை சுற்றிலும் அருகிலிருக்கும் அடர்த்தி அதிகமுள்ள வாயு நிரப்பிவிடும். வாயுமட்டுமில்லை, அடுப்பில் மிதமாக சூடாக்கப்படும் தண்ணீர் பாத்திரத்தின் அடியிலிருந்து மேலாக தன்னிச்சையாக சுழலுவதற்கும் இதுதான் சுருக்கமான விளக்கம். இதோ ஒரு விளக்கப்படம்.

இதே வெப்ப சலனம்தான் சூரியனிலும் நடக்கிறது. ஆனால் தண்ணீரிலோ வாயுவிலோ இல்லை. சூரியனில் இவையிரண்டும் இல்லை. சூரியனில் அணுக்கரு உருக்கத்தின் விளைவாக ஏற்படும் மிக அதிக உஷ்ணத்தில் மேட்டர் முழுவதுமே திட, திரவ நிலைகளை கடந்த பிளாஸ்மா எனும் நிலையில். சில எலக்ட்ரான்களை இழந்த அயன் எனப்படும் நிலையிலிருக்கும் அணுக்களாலான மேட்டர். சூரியனின் மேற்பரப்பே கிட்டத்தட்ட 5800 கெல்வின் வெப்பநிலை. நடுசெண்டரில் பல்லாயிரம் கெல்வின்கள். சூடான காற்று வெப்ப சலனத்தினால் பூமியின் மேலெழும்புவதுபோல, சூரியனிலும் இந்த சூடான பிளாஸ்மா உள்ளிருந்து வளிக்கு, சூரியனின் புவியீர்ப்பை எதிர்த்து மேலெழும்புகிறது. ஆனால் அதிவேகமான அமளி ஓட்ட வெப்ப சலனத்தினால். (அமளியோட்டம் என்றால் டர்புலன்ஸ். அறிமுகம்.) பரப்பிற்கு வந்து குளிர்ந்து மீண்டும் சூரியனுக்குள் அமிழ்ந்துவிடுகிறது. இப்படி தொடர்ந்து ஏற்பட்டுகொண்டிருக்கும் பிளாஸ்மா சுழல்தான் சூரியனுக்குள் உண்டாக்கும் உஷ்ணத்தை பரப்புவரை கொண்டுவருகிறது.
(இடைச்சொருகல்: கிராவிட்டி என்பதை புவியீர்ப்பு என்று இன்றுவரை தமிழாக்கியுள்ளோம். இது சரியா? புவி என்பது பூமியை மட்டும் குறிக்கும் சொல்லாகிறதே, ஆனால் மேலே சொன்னபடி, சூரியனிலும்தான் கிராவிட்டி இயங்குகிறது, சூரியயீர்ப்பு என்றால் கிராவிட்டி விளக்கத்திற்கு அநாவசியமாகிறதே. பூமி தாண்டி அறிவியலை தமிழில் வளர்த்துக்கொள்ளமாட்டோம் என்று முதலிலேயே யோசிக்காமல் தமிழாக்கியதால் வரும் கோளாறோ? சற்று உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து, கிராவிட்டி என்றே மூதறிஞர்கள் ”தமிழாக்கி” விட்டிருக்கலாமோ?)
உள்ளிருந்து பரப்புவரை வெப்பசலனத்தினால் சுழன்றுகொண்டிருக்கும் பிளாஸ்மா தவிர, ஸோலார் ப்ராமினன்ஸ் எனப்படும் தீடீர் வெளியேற்றங்களும் உண்டு. ஸோலார் ப்ராமினன்ஸ் என்றால் சூரிய கற்றை எனலாம். வெறும் ஒளிக்கற்றை இல்லை. சொக்கபனையில் ஏற்படும் தீஜ்வாலைகளை பார்த்திருப்போம். அவை அமளியோட்டத்தினால் நர்த்தனமாடி மேலெழும்பிக்கொண்டிருக்கும் ஒளியடங்கிய உஷ்ணத் தீஜ்வாலைகள், கற்றைகள். அதுபோலவே மண்ணுக்கும் வின்னுக்குமாய் ஓங்கி உலகளந்த உத்தம சூராவளியாக த்ரிவிக்ரமாவதார சைஸில் சுழன்று சூரியனிலிருந்து சில வேளைகளில் சில பகுதிகளில் அதன் பரப்பை கடந்து வானத்திற்கு தாவி பிளாஸ்மா மேலெழும்புகிறது. கொளுத்தப்பட்டுவிட்ட தீபாவளி வெடிக்குப்பையில் திடீரென்று பற்றி எறிந்து பீய்ச்சும் ஒரு புஸ்வானம் போல சூரியபரப்பிலிருந்து வெளிக்கிளம்பும் இவ்வகை பிளாஸ்மா புஸ்வானம், மொத்தமாக சூரியனின் புவியீர்ப்பை விட்டு வெளியேறமுடியாமல் வெளிப்புறத்திற்கு பீய்ச்சியடிக்கப்பட்டதால் குளிர்ந்து மீண்டும் சூரியனுள் வேறு இடத்தில் விழுகிறது. இதுதான் ஸோலார் ப்ராமினன்ஸ் அல்லது சூரிய கற்றை.
அருகில் பாத்து ரசிக்கவேண்டுமா. இதோ சென்ற வாரம் (ஏப்ரல் 2011இல்) நாஸாவின் அதே எஸ். டி. ஓ .வின் டெலஸ்கோப் படம்பிடித்த ஒரு பிரமிப்பான வீடியோ.
சுட்டி — http://www.youtube.com/watch?v=6voI4wQzS7Y
வீடியோவில் பார்க்கையில் ஏதோ சிகரெட் புகை வளையம்போல, காற்றிலாடும் முடிக்கற்றை போலத் தோன்றும் இந்த ராட்சஸ சூரிய பிளாஸ்மா வளையங்கள் எவ்வள வு பெரிதென்றால், சூரிய பரப்பிலிருந்து வளையத்தின் உச்சிக்கான இடைவெளியில் அஸால்டாய் நம் பூமியையே நுழைத்துவிடலாம். கிட்டத்தட்ட 44000 மைல் உயரமாம். அகலமோ, அதாவது பிராமினன்ஸ் வளையம் சூரியனின் பரப்பில் தோன்றி விழும் பகுதிகளூக்கிடையேயான தூரமோ, சூரியமண்டலத்திலேயே பெரிதான வியாழன் கிரகத்தைவிட பெரிய சைஸ். பீய்ச்சப்படும் வேகமோ நொடிக்கு 600 முதல் 1000 கிலோமீட்டர் வரையாம்.ப்ராமினன்ஸ்களின் ஆயுசு நம் ஒரு நாள். மீண்டும் சூரியனுள் விழுந்து அடங்கிவிடுகிறது. பிறகு வேறு பகுதியில் தொடரும்.
(வீடியோவில் இதன் ஒரு நாள் ஆயுளை ஃபாஸ்ட்ஃபார்வேர்டாய் சில நொடிகளுக்குள் சுருக்கிவரைந்திருக்கிறார்கள்)
சூரிய கறை, சூரிய கற்றை இரண்டிற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் கற்றை சராசரியான சூரிய பரப்பிலிருந்தும் விடுபட்டு வீடியோவில் பார்த்தது போல பல்லாயிரக்கணக்கான மைல்கள் எழும்பி பெரிய வளையமாக பிரயாணித்து மீண்டும் சூரியனுக்குள் விழுவது. சூரிய கறைகள் வெப்ப சலனத்தினால் உள்ளிருந்து பரப்புவரை சுழலும் பிளாஸ்மா ஓட்டத்தின் சூரிய பரப்பில் குளிர்ந்த ஒரு பகுதி. இதை மேலும் விளக்குவோம்.
சூரியனின் மேற்பரப்பில் எப்படி பிளாஸ்மா குளிருகிறது என்றால், அதுதான் நமக்கு வெய்யில். அதாவது சூரியக்கதிர்களாக மின்காந்த கதிரியக்கமாக வளியில் உஷ்ணம் விசிறப்படுகிறது. சுமார் எட்டு நிமிடத்திற்கு பிறகு ஒரு பகுதி பூமிதொட்டு வெய்யிலாக நம்மை வாழவைக்கிறது, வியர்க்கவைக்கிறது, வியக்கவும் வைக்கிறது.இவ்வாறு என்திசையிலும் சூரியனின் உஷ்ணம் செலவாகி, மேற்பரப்பில் பிளாஸ்மா புயல் சற்று குளிர்கிறது. தொடர்ந்து இவ்வகை சூறாவளிகள் சூரியனில் அனைத்து இடங்களிலும் நடந்தபடி.
இடையே ஆங்காங்கே லோக்கலாக திடீர் திடீரென்று காந்த அலைகள் சூரியனின் உள்ளிருந்து ஆரமாக மேலெழும்பி மீண்டும் உள்ளே விழுகிறதாம். வீட்டிலுள்ள சிறு காந்தத்தின் தென் வட துருவங்களுக்கிடையே ஏற்படும் காந்தவிசைக்கதிர்கள் போல, சூரியனையே காந்தமாக கருதி அதன் இருபுலன்களுக்கிடையே இக்கதிர்களை யோசித்துப்பாருங்கள். இக்காந்த அலைகள் மேற்படி வெப்ப சலனத்தினால் சுழன்றுகொண்டிருக்கும் பிளாஸ்மா தூண்களுக்கிடையே ஊடுருவுகையில் மேட்டர் தலைகால் புரியாத கந்தலாகிவிடுகிறதாம்.புரிவது என்னவேன்றால்,இந்த காந்தவிசை சூரியனில் வெப்ப சலனத்தை மட்டுபடுத்துகிறது. அதனால், சூரியனின் உள்ளிருந்து வெளியே பீய்ச்சியடிக்கப்படும் பிளாஸ்மா சற்று வேகம் குறைந்துவிடுகிறது. ஏற்கனவே பரப்பில் குளிர்ந்து சாதாரணமாக மீண்டும் வெப்ப சலனத்தினால் சூரியனின் உள்ளே சென்றிருக்க வேண்டிய  பிளாஸ்மா பகுதிகளை, இந்த வேகம் குறைந்துவிட்ட வெளிவந்துகொண்டிருக்கும் பிளாஸ்மா பகுதிகள் உள்ளே வரவிடாமல் தாங்கிப்பிடித்துவிடுகிறது.
இ ப்படி ஆங்காங்கே சூரியனின் பரப்பில் குளிர்ந்து, பரப்பிலேயே தேங்கிவிட்ட பிளாஸ்மா பகுதிகள்தான் சூரியக்கறைகள். சூடான எண்ணையில் பொறிந்து, மீண்டும் இலுப்பைசட்டியினுள் அமிழமுடியாமல் மேலெழும்பும் மெதுவடையை மனதில்கொள்ளுங்கள்.
இதோ சூரிய கறையின் ஒரு குளோஸப் ஷாட்.

படத்தில் கருப்பாக இருக்கும் திட்டுதான் சூரிய கறை. சைஸ் பல்லாயிரம் மைல்கள் பரப்பளவு. கிட்டத்தட்ட 4000 முதல் 5000 கெல்வின் வரை வெப்பநிலை. ஆயுசோ சில மணிநேரங்களே. அதற்குள் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த காந்தபுயலின் திசை, விசை மாறி, தாங்கிப்பிடிக்க கீழே மேட்டரின்றி, குளிர்ந்த பிளாஸ்மா மீண்டும் சூரியனுள்ளே கொட்டிவிடும்.மேற்பரப்பில் நாம் டெலஸ்கோப் வைத்து படம்பிடித்துக்கொண்டிருக்கும் கறை கருப்பு கலர் கரைந்து, மறைந்துவிடுகிறது.
அவ்ளோ ’ஹீட்’டுனா கறை ஏன் கருப்பு கலராகீது? கறை சராசரியாக 4500 கெல்வின் வெப்பநிலை என்றால், சுற்றிலும் உள்ள மற்ற சூரிய பரப்பு இதைவிட அதிகமான  5800 கெல்வின் வெப்பநிலையில் இருக்கிறது.கிட்டத்தட்ட ஒரு 1000 கெல்வின் வெப்பநிலை வித்தியாசம். இதனால் அருகருகே இருக்கும் இவ்விரு பகுதிகளிலிருந்தும் வெளிப்படும் கதிரியக்கத்தின் அளவு வெகு அதிகமாக மாறுபடும். (பள்ளிப்பாடத்தில் ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் உஷ்ணக்கதிரியக்கம் அதன் வெப்பநிலையின் நான்காம் படியை, அடுக்குக்குறியை — raised to power 4 — சார்ந்து இருக்கும் என்பதை அறிவோம்.) இந்த கதிரியக்க வெளிப்பாட்டு வித்தியாசத்தினால்தான் டெலஸ்கோப்பில் பார்த்து படம்பிடிக்கும் இந்த கறைகள்,அருகிலிருக்கும் சூரியப்பகுதிகளைவிட ஒளிகம்மியாகி, நமக்கு கருப்பு கறையாக தெரிகிறது.
சூரிய கறைகளாலும் கற்றைகளாலும் பூமியில் வசிக்கும் நமக்கு நேரிடையாக பாதிப்பு ஒன்றும் இல்லை. இவற்றின் தோற்றம் அதிகரிக்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளின் வீரியம் அதிகமாகிறது எனத்தெரிகிறது. இதனால் பூமியில் அரோரா எனப்படும் துருவப்பிரதேசங்களில் ஏற்படும் பிரகாசமான மின்காந்தப்புயல்கள் அதிகரிப்பதாக தெரிகிறது. இதற்குமேல் யோகம், உபயோகம் பொருத்திருந்து அறிவோம்.
சான்றேடுகள்/சுட்டிகள்
1.  நாஸா எஸ்.டி.ஓ. வின்கலன் பற்றி http://sdo.gsfc.nasa.gov/
2.  சூரிய கறை பற்றி மேலும் http://www.universetoday.com/42259/what-is-a-sunspot/
3.  சூரிய கற்றை பற்றி மேலும் http://solar.physics.montana.edu/ypop/Program/hfilament.html
4.  வெப்ப சலனம் பற்றி http://wp.me/pJjFi-3p
5.  அமளி ஓட்டம் –- டர்புலன்ஸ் – அறிமுகம் http://wp.me/pJjFi-cc
6.  சூரியனில் அமளி ஓட்டம் http://wp.me/p15OrA-1

நன்றி:அருண்

Sep 1, 2011

துணுக்குகள்

1. பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.
2. உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்தது. இதில் சுமார் 8
லட்சம் மக்கள் இறந்தனர்.
3.சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள் எடுக்கின்றது.
4.சராசரியாக ஒரு மனிதன் ஐந்து முறை சிரிக்கின்றான்.
5.ஆல்பிரட் நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப்படுகின்றன) 1866ஆம் ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்தார்.
6.எபோலா என்னும் வைரஸ் தாக்கினால், ஐந்தில் நான்கு மனிதர்கள் இறந்துவிடுவார்கள்.
7.2010க்குள் கால்வாசி செடி இனங்கள் அழியும் அபாயம் உள்ளது.
8.உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி,ஈயின் கண்ணைவிட சிறியது.
9.மிக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18 மைல்கள்.
10.பிற‌க்கும் 2000 குழ‌ந்தைக‌ளில் ஒரு குழ‌ந்தை ப‌ற்க‌ளுட‌ன் பிற‌க்கின்ற‌ன‌.
11.சில‌ வகை ச‌வுக்கு ம‌ர‌ங்க‌ள் ஒரு நாளைக்கு 3 அடி வ‌ள‌ர்கின்ற‌ன.
12.ச‌ராச‌ரியாக‌ ஒரு ம‌னித‌ன் 4850 வார்த்தைக‌ளை 24 ம‌ணி நேர‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான்.
13.லியானார்டோ டார்வின்சி ஒரு கையில் எழுதிக்கொண்டே ம‌று கையில் வ‌ரையுவும் செய்வார்.
14. க‌ண்க‌ளை திற‌ந்துவைத்து தும்முவ‌து சாத்திய‌மில்லை
15. நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் toothbrushக‌ளை க‌ழிவ‌றையில் இருந்து குறைந்த‌து ஆறு அடி த‌ள்ளி வைக்க‌ வேண்டுமென‌ ப‌ல்ம‌ருத்துவ‌ர்க‌ள் ப‌ரிந்துரைக்கின்றார்க‌ள்.
16.க‌ர‌ப்பான்பூச்சி த‌லையின்றி ப‌த்து நாள் வ‌ரை உயிர் வாழும்
17.விர‌ல்க‌ளில் ந‌க‌ங்க‌ள் வ‌ள‌ர்வ‌து இய‌ற்கை. அதில் ஆட்காட்டி விர‌லில் மிக‌ நிதான‌மாக‌வும், ந‌டுவிர‌லில் மிக‌ வேக‌மாக‌வும் வ‌ள‌ருமாம்.
18. நான்கு வய‌து குழ‌ந்தை நாளைக்கு நானூறு கேள்விக‌ள் கேட்கின்ற‌தாம்.
19. ஒவ்வொருவ‌ரின் கை ரேகையும் த‌னித்துவ‌மான‌து. அதே போல‌ தான் நா ரேகையும்
20. ப‌ன்றிக‌ள் தானாக‌ வான‌த்தை பார்ப்ப‌து சாத்திய‌மே இல்லை
21. கெட்டுப்போகாத‌ உண‌வுப்பொருள் ‍ தேன்
22. ந‌த்தை தொட‌ர்ந்து மூன்று வ‌ருட‌ங்க‌ள் தூங்க‌லாம்.
23. ப‌ட்டாம்பூச்சிக‌ள் த‌ங்க‌ள் பாத‌ங்க‌ளினால் சுவைக்கின்ற‌ன‌.
24. கிளியும் முய‌லும் த‌ங்க‌ள் பின்னால் இருப்ப‌தை த‌லை திருப்பாம‌ல் காண‌முடியும்.
25. நீர் யானை ம‌னித‌னை விட‌ மிக‌ப்பெரிய‌து, ஆனால் அது ம‌னித‌னை விட‌ வேக‌மாக‌ ஓடும்.
26. க‌ண் இமைக‌ளில் ம‌னித‌னுக்கு 550 முடி இருக்கின்ற‌து.
27. அண்டார்டிகா க‌ண்ட‌த்தில் ம‌ட்டும் நிலங்கள் க‌ட‌ல் ம‌ட்ட‌த்திற்கு கீழே எங்கும் இல்லை.எல்லா இட‌மும் க‌ட‌ல் ம‌ட்ட‌த்திற்கு மேல் தான் உள்ள‌து.
28. வாத்தின் குவாக் குவாக் ச‌த்த‌த்தை கேட்டிருக்கின்றீர்க‌ள் அல்ல‌வா? அத‌ன் ஒலி ம‌ட்டும் எதிரொலிப்ப‌தே இல்லை. இதுவ‌ரை ஏன் என்று தெரிய‌வில்லை.
29. டைப் ரைட்ட‌ரில் முத‌ன் முத‌லாக‌ த‌ட்ட‌ச்ச‌ப்ப‌ட்ட‌ நாவ‌ல் ‍ டாம் சாய‌ர்
30. த‌ங்க‌ மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மையாக‌ மாறிவிடுமாம்.
31. ப‌னிக்க‌ர‌டிக‌ள் ஒரே அம‌ர்வில் 86 பென்குயின்க‌ளை விழுங்குமாம்.
32. டான்பின்க‌ள் ஒரு க‌ண்னை திற‌ந்து வைத்த‌ப‌டியே உற‌ங்குகின்ற‌ன‌.
33. மாடுக‌ளை மாடிப்ப‌டிக‌ள் ஏற‌வைக்க‌லாம், இற‌ங்க‌ வைக்க‌ முடியாது.
34. ம‌னித‌னின் மூக்கும் காதும் வ‌ள‌ர்ந்துகொண்டே போகும், ஆனால் க‌ண்க‌ள் வ‌ள‌ராது.
35. வ‌யிறு நிறைய‌ உண்ட‌ பிற‌கு, ச‌ற்று நேர‌ம் கேட்கும‌ திற‌ன் குறையுமாம்

நன்றி: சஹானா

Aug 31, 2011

ஆயிரம் மீட்டர் உயரத்தில் ஒரு அதிசயம்!

கண்ணுக்கெட்டும் உயரம் வரை, கட்டடங்களை கட்டி, உலக நாடுகளை பிரமிக்க வைப்பதில், வளைகுடா நாட்டுக்காரர்களை, யாராலும் மிஞ்ச முடியாது. சில ஆண்டுகளுக்கு முன், துபாயில் புர்ஜ் கலிஜியா என்ற, 828 மீட்டர் உயரமுள்ள, மிகப் பெரிய கட்டடத்தை கட்டி, அசத்தினர். உலகின் மிக உயரமான சொர்க்கம் என, இந்த கட்டடம் வர்ணிக்கப்படுகிறது.
இப்போது, இதை மிஞ்சும் வகையில், மற்றுமொரு பிரமாண்டமான பாலைவன சொர்க்கம், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உருவாகப் போகிறது. இந்த புதிய கட்டடத்துக்கு, "கிங்டம் டவர்' என, பெயரிடப்பட்டுள்ளது. இதன் உயரம் என்ன தெரியுமா... 1,000 மீட்டர். இந்த கட்டடத்தின் உச்சிக்கு, "லிப்ட்'டில் பயணித்தாலும், 12 நிமிடங்கள் ஆகும்.
இந்த பிரமாண்ட கட்டடத்தில், நான்கு ஆடம்பர சொகுசு ஓட்டல்கள், அபார்ட்மென்ட்கள் மற்றும் உச்சியில் இருந்து, ஜெட்டா நகரத்தின் அழகை ரசிக்கும் வகையிலான, கண்காணிப்பு கோபுரம் ஆகியவையும் அமையவுள்ளன.
இதற்காக, 5,400 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது துவங்கி விட்டாலும், முற்றிலும் முடிவடைய, ஐந்து ஆண்டுகள் ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் தான், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளப் போகிறது. "கட்டடத்தின் உயரம், 1,000 மீட்டர் என, தற்போது ஒரு மதிப்பீட்டுக்காக கூறியுள்ளோம். ஆனால், உயரம் பற்றிய விஷயங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன், உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது...' எனக் கூறி, பிரமிக்க வைக்கின்றனர், சவுதிக்காரர்கள்.